டிக்டொக் காதலனை தேடி வந்த 67 வயது வெளிநாட்டு பெண் சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டிக்டொக் காதலனை தேடி வந்த 67 வயது வெளிநாட்டு பெண் சடலமாக மீட்பு!


வெள்ளவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த நெதர்லாந்து பெண் ஒருவரின் சடலம் நேற்றிரவு (24) மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் நெதர்லாந்தைச் சேர்ந்த 67 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் 37 வயதுடைய உள்ளூர் ஆணுடன் மாடி வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளமான ரிக்ரொக் மூலம் இளைஞர் ஒருவருடன் அறிமுகமாகி, இணையத்திலேயே காதல் மலர, அந்த காதலனைத் தேடி இலங்கைக்கு வந்துள்ளார்.

ரிக்ரொக் காதலனுடன் வெள்ளவத்தையில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டள்ளார்.

மரணத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சடலம் தற்போது களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.