இந்தியாவில் 36 மணி நேரமும், இலங்கையில் 04 மணி நேர மின்வெட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இந்தியாவில் 36 மணி நேரமும், இலங்கையில் 04 மணி நேர மின்வெட்டு!

இந்தியாவின் சண்டிகர் மாநிலத்தில் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் 36 மணி நேரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின் ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டமே இதற்குக் காரணம்.

மின் தடை காரணமாக பிரதான வீதிகளில் உள்ள ஒளி சமிக்ஞைகளும் செயலிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மின் தடை காரணமாக வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் சத்திரசிகிச்சைகளை தாமதப்படுத்த வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சண்டிகர் அதிகாரிகள் நேற்று (22ம் திகதி) அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை அமல்படுத்தியதுடன், மின்சாரத் துறையில் வேலைநிறுத்தம் செய்ய 6 மாதங்கள் தடை விதித்தனர்.

மின்சாரத் துறையை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, அனல் மின் நிலையங்களுக்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் இன்று (23) முதல் 4 மணித்தியால 40 நிமிட மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.