கந்தளாய் சீனி நிறுவனத்துடன் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் சிங்கப்பூருக்கு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கந்தளாய் சீனி நிறுவனத்துடன் 20 ஆயிரம் ஏக்கர் நிலம் சிங்கப்பூருக்கு!


திருகோணமலை கந்தளாய் சீனி நிறுவனத்தின் 85 வீத பங்குகளை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் ஒன்றை நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சமர்பித்துள்ளார்.


இது தொடர்பான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட நாளில் இருந்து பணிகளை ஆரம்பித்து 10 ஆண்டுகள் பூர்த்தியாகும் வரை முதலீடு செய்யும் நிறுவனத்திற்கு 85 வீத பங்குகளும் இலங்கை அரசுக்கு 15 வீத பங்குகளும் கிடக்கும் என உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.


10 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகள் பூர்த்தியாகும் போது முதலீட்டாளருக்கு 75 வீத பங்குகளும் இலங்கை அரசுக்கு 25 பங்குகளும் கிடைக்கும். 20வது ஆண்டில் இருந்து முதலீட்டு காலம் முடியும் வரை இரண்டு தரப்பினரும் பெற்றுக்கொள்ளும் பங்கு வீதங்களுக்கு அமைய நிறுவனத்தின் உரிமை தீர்மானிக்கப்படும்.


இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு சட்டமா அதிபரின் அனுமதியும் கிடைத்துள்ளது.


இதனிடையே மேற்படி அமைச்சரவை பத்திரத்தின் மூலம் கந்தளாய் சீனி நிறுவனத்திற்கு சொந்தமான 20 ஆயிரம் ஏக்கரை விற்பனை செய்யவும் ஆசியாவில் மிகப் பெரிய மதுபான உற்பத்தி தொழிற்சாலையையும் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.


இதனை தாம் எதிர்ப்பதாக அந்த ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் குணதாச அமரசேகர கூறியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.