கடனை செலுத்தாமல் வெளியேறும் CEYPETCO; IOCயிடம் எரிபொருள் கொள்வனவு செய்ய டொலர் கோரும் CEB!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடனை செலுத்தாமல் வெளியேறும் CEYPETCO; IOCயிடம் எரிபொருள் கொள்வனவு செய்ய டொலர் கோரும் CEB!


இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக தமது அமைச்சுக்கு நேரடியாக நிதி வழங்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


பெற்றோலிய கூட்டுத்தாபனத்தை நம்பி இருக்காமல் தேவையான எரிபொருளை கொள்வனவு செய்யுமாறு இலங்கை மின்சார சபை இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்குவதற்கு டொலர்களை வழங்குமாறு இலங்கை மின்சார சபையிடம் கோரியுள்ளது.


இலங்கைக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இந்தியா வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் ஒரு பகுதியை தமது அமைச்சுக்கு வழங்குமாறும் அமைச்சர் காமினி லொக்குகே கோரிக்கை விடுத்துள்ளார்.


மின்வெட்டு இல்லாமல் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு மாதம் 30 மில்லியன் டாலர் எரிபொருள் தேவைப்படுகிறது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.