சிறைச்சலையில் மரணித்த கைதி; மூன்று அதிகாரிகள் பணி நீக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைச்சலையில் மரணித்த கைதி; மூன்று அதிகாரிகள் பணி நீக்கம்!

Department of Prison Sri lanka

எம்பிலிப்பிட்டிய, கந்துருகஸ்ஸார திறந்தவெளிச் சிறைச்சாலையில் சிறைதண்டனை அனுபவித்துவந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்ற கைதியின் மரணம் தொடர்பில் சிறைச்சாலையின் மூன்று அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான (நிர்வாகம் மற்றும் புனர்வாழ்வு) சந்தன ஏகநாயக்க, இன்று (23) தெரிவித்தார்.


குறித்த சிறைச்சாலைக்குப் பொறுப்பான சிறைச்சாலை அதிகாரி, காவலர் மற்றும் சார்ஜன்ட் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடியும் வரை இந்த மூன்று அதிகாரிகளின் பணி இடைநிறுத்தம் அமுலில் இருக்கும் எனவும் ஏக்கநாயக்க தெரிவித்தார்.


உயிரிழந்த கைதியின் மகளை தொலைபேசியில் அழைத்து மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், கைதியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஏகநாயக்க தெரிவித்தார்.


சிறைச்சாலை அதிகாரிகளால் கைதி அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவின் உதவி அத்தியட்சகரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.