கம்பளை ஆற்றில் மிதந்த பெண்ணொருவரின் சடலம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கம்பளை ஆற்றில் மிதந்த பெண்ணொருவரின் சடலம்!

மகாவலி ஆற்றில் பெண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்னர்.

இதனையடுத்து கம்பளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கம்பளை இல்வத்துர பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கம்பளை காவல் நிலைய பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் லக்சிறி பெர்னாண்டோ, குறித்த பெண் தொடர்பான செய்திகளை சுற்றுவட்டார காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

உயிரிழந்தவர் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்கவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவருடையது என சந்தேகிக்கப்படும் கைப்பை ஒன்று ஆற்றின் கரையில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இருந்து 15,000 ரூபாய் பணமும் மேலும் சில மருந்துப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.