அம்புலன்ஸ் வண்டி மீது துப்பாக்கிச்சூடு - பாணந்துறையில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அம்புலன்ஸ் வண்டி மீது துப்பாக்கிச்சூடு - பாணந்துறையில் சம்பவம்!

இன்று பாணந்துறையில் அம்புலன்ஸ் வாகனம் ஒன்றின் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்புலன்ஸ் வாகனம் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்குள் நுழைய முற்பட்ட போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நால்வர், அம்புலன்ஸ் சாரதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாக அவர் கூறினார்.

சந்தேகநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்த முயற்சித்ததாகவும், ஆனால் அந்த நேரத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் செயலிழந்ததன் காரணமாக துப்பாக்கி சுடுவதில் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.

முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து சந்தேகநபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.