மோட்டார் சைக்கிள் திருடி தப்பிச் செல்ல முயன்ற நபர் டிப்பருடன் மோதியதில் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மோட்டார் சைக்கிள் திருடி தப்பிச் செல்ல முயன்ற நபர் டிப்பருடன் மோதியதில் மரணம்!


யாழ்ப்பாணம், சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (24) இரவு டிப்பர் ரக வாகனம் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சுன்னாகம் சந்தியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை மூவர் திருடிச் சென்றதுடன், திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உரிமையாளர்கள் கும்பலை துரத்திச் சென்றுள்ளனர். 

மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச் சென்ற நிலையில், எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் உயிரிழந்துள்ளார். 

பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஏனைய இருவரையும் பிரதேசவாசிகள் மடக்கிப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உயிரிழந்தவர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ராசா ரவிச்சந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இரு சந்தேகநபர்கள் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர்கள். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.