நாட்டில் பரவும் புதிய வகை வைரஸ் - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் பரவும் புதிய வகை வைரஸ் - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் தற்போது கொரோனா வைரஸைத் தவிர மற்றுமொரு வைரஸ் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) எச்சரித்துள்ளது.

தற்போது நாட்டில் பல வைரஸ்கள் பரவி வருவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க உறுப்பினர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார்.


கொரோனா வைரசை போன்ற இப்புதிய வைரஸும் பரவி வருவதாகக் கூறிய அவர், மறுபுறம், டெங்கு வைரஸும் அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

புதிய வைரஸ் பரவல் காரணமாக நாடு பாரதூரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், ஒமிக்ரோன் மாறுபாடு அல்லது கொரோனா வைரஸின் பிற புதிய வகைகளை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கமானத ஜனாதிபதி, சுகாதார அமைச்சகம் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது.

சிறப்பு மருத்துவர்கள், பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சுகாதார நிபுணர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினால் இந்த அறிக்கை தொகுக்கப்பட உள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.