வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கிய மேலுமொரு நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வைத்தியருக்கு கைக்குண்டு வழங்கிய மேலுமொரு நபர் கைது!


பொரளை தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியருக்கு குறித்த குண்டை வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


ஹம்பாந்தோட்டை - ரன்ன பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான் தேவாலயத்தில் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டிருந்தது.


இந்நிலையில், குறித்த கைக்குண்டை வைத்ததாக நம்பப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.


அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைய பிலியந்தலையில் வைத்து கடந்த 17ஆம் திகதி குறித்த ஓய்வுபெற்ற வைத்தியர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.


இந்நிலையில், தற்போது வரை குறித்த கைக்குண்டு விவகாரம் தொடர்பில் மொத்தமாக 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.