நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இயந்திர கோளாறை ஆராய்வு செய்வதற்காக நபரொருவர் இலங்கை வருகை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இயந்திர கோளாறை ஆராய்வு செய்வதற்காக நபரொருவர் இலங்கை வருகை!

சீன நிபுணர் ஒருவர் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் இயந்திர கோளாறை ஆராய்வு செய்வதற்காக இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று செயலிந்ததையடுத்து, அதனை ஆராயும் நோக்கிலேயே குறித்த சீன நிபுணர் வந்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மின்சாரசபை தலைவர் கூறுகையில்,மின் பிறப்பாக்கி விரைவில் பழுதுபார்க்கப்பட்டு 300 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேநேரம் மின் விநியோகம் தொடர்பான தற்போதைய நிலைமை பெருமளவில் தீர்க்கப்படும். அதேவேளை, மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரியை தடையின்றி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மே மாதம் வரை நிலக்கரி போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.