சகோதரனுடன் சென்ற மாணவன் மீது புகையிரதம் மோதி சம்பவ இடத்திலேயே பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சகோதரனுடன் சென்ற மாணவன் மீது புகையிரதம் மோதி சம்பவ இடத்திலேயே பலி!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் புகையிரத கடவையை கடக்க முற்பட்ட உயர்தர மாணவர் புகையிரதத்தில் மோதி நேற்று (24) உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையில் கொழும்பில் இருந்து காங்கேசந்துறை நோக்கி பயணித்த புகையிரதத்துடன் மாணவர் மோதியதில் உயர்தர மாணவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது சகோதரனுடன் பயணித்த போது புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது புகையிரதம் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணம், வரணி பிரதேச மீசாலை வீரசிங்கம் கல்லூரியில் உயர்தரம் பயிளும் 18 வயதுடைய உதயகுமார் பானுஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.