சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய தந்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய தந்தை!

ஹட்டன் - குடாகம சமகி மாவத்தை பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய தந்தை ஹட்டன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மூத்த பெண் பிள்ளைக்கு 11 வயதாகும் நிலையில் மற்ற இரண்டு பிள்ளைகளும் 8 மற்றும் 7 வயது சிறுமிகளாவர். அதேபோல் ஆண் பிள்ளைக்கு 6 வயது. 6 வயதுடைய சிறுவனும் அச்சிறுவனின் அக்காவான 7 வயது சிறுமியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களது தாயும் அருகிலிருந்துள்ளார்.

அச்சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் குழந்தைகள் அழுவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாமல் அயலவர்கள் அவர்களை காப்பாற்றியுள்ளனர். மது போதையில் இருந்த குறித்த நபர் தனது மனைவி மற்றும் குழந்தைகளை பலமுறை தாக்கியதாகவும், மனைவியைத் தாக்கி அவரின் கை முறிந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கியதாகவும் அச்சிறுவர்களின் தந்தை காவல்துறையில் தெரிவித்துள்ளார்.



இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.