ஆங்கில மொழியினால் தேசிய மொழியான சிங்கள மொழிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆங்கில மொழியினால் தேசிய மொழியான சிங்கள மொழிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்!


நாட்டில் தற்போது பெரும்பாலான உயர்கல்வி கற்கை நெறிகள் ஆங்கில மொழியில் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமை மற்றும் விசேட பட்டப்படிப்புகள் என்பன ஆங்கிலத்தில் மாத்திரம் முன்னெடுக்கப்படுகின்றமையானது இலங்கையின் பாரம்பரியத்திற்கும் தேசிய மொழிக்கும் பாரிய அச்சுறுத்தலாகும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.


கலாநிதி ஈ.எம். ரத்னபால எழுதிய 'சிங்கள பஸ் விமசும' நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,


சர்வதேச அரங்கில் நுழைவதற்கு ஆங்கிலத்தின் அவசியத்தை அங்கீகரிப்பது இன்றியமையாதது. 


எனினும் அனைத்து விடயங்களிலும் எமது தாய் மொழிக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அதனை வாழும் மொழியாக பேணப்பட வேண்டும். 


ஆபிரிக்காவிலுள்ள சில முக்கிய மொழிகளுக்கு ஏற்பட்ட நிலையை சிங்கள மொழியும் எதிர்கொண்டு விடக்கூடாது. 


மேலும் உலகின் பல நாடுகள் தமக்கான அடையாளத்தை முதன்மைப்படுத்துவது போன்று இலங்கையிலும் உயர்கல்வி வடிவமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.