நீதியமைச்சர் அலி சப்ரியிடம் மன்னிப்பு கோரிய மெடில்லே தேரர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நீதியமைச்சர் அலி சப்ரியிடம் மன்னிப்பு கோரிய மெடில்லே தேரர்!!

ஜனாதிபதி சட்டத்தரணி மற்றும் நீதியமைச்சரான அலி சப்ரிக்கு அவதூறான அல்லது அவமதிக்கும் வகையிலான கருத்துக்களை இனியும் வெளியிடப் போவதில்லை என சிங்கள அமைப்பின் மதில்லே பன்னலோக தேரர் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விடுத்துள்ள அறிக்கையில் உறுதியளித்துள்ளார். 

நீதியமைச்சர் மற்றும் பன்னலோக தேரருக்கு இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு அமையவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீதியமைச்சர் அலி சப்ரி தன்னை இழிவுபடுத்தியதற்காக 1500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரி கடந்த மே மாதம் 27ஆம் திகதி வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
பிரதிவாதியை சமூக ஊடகங்களில் அவமதிப்பதைத் தடுக்கவும், அவமதிப்புக்கு இழப்பீடு கோரியும் மனுதாரர் கோரிக்கை முன்வைத்திருந்தார். 

இந்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான மாவட்ட நீதிபதி அருண அலுத்கே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. பின்னர் இரு தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் பிரகாரம் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.