ரூ. 40 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு பணம் பறிமுதல் - விமான நிலையத்தில் ஐவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரூ. 40 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு பணம் பறிமுதல் - விமான நிலையத்தில் ஐவர் கைது!

ரூ. 40 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு நாணயம் இலங்கைக்கு வெளியே எடுத்துச் செல்ல முட்பட்ட காரணத்தினால் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இக்குழுவினரிடம் இருந்து 22,300 அமெரிக்க டொலர்கள், 63,500 யூரோக்கள், 8,725 ஸ்ரேலிங் பவுண்கள், 29,200 சவூதி ரியால்கள் மற்றும் 75,000 திர்ஹாம்கள் இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் அடங்குவதாகவும், இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு (19) எமிரேட்ஸ் Flight EK 649 ஊடாக டுபாய்க்கு செல்ல முற்பட்ட போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.