அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபததில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமெரிக்காவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபததில் குழந்தைகள் உட்பட பலர் உயிரிழப்பு!

அமெரிக்கா, நியூயார்க் நகரில் உள்ள 19 மாடி குடியிருப்பில் வீடு ஒன்றில் பற்றிய தீ, மளமளவென கட்டடத்தின் பிற பகுதிகளுக்கும் பரவியது. தகவலறிந்து சென்ற 200க்கும் அதிகமான மீட்புப்படையினர், தீயை அணைத்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் 9 குழந்தைகள் உட்பட 19 பேர் தீயில் சிக்கியும் புகையால் மூச்சுத் திணறியும் உயிரிழந்தனர். 60க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இதில் பாதிபேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நியூயார்க் நகர மேயர் கூறியுள்ளார். அமெரிக்காவில் ஒரே வாரத்தில் நிகழ்ந்த 2ஆவது மோசமான தீ விபத்து இதுவாகும். முன்னதாக கடந்த புதன்கிழமையன்று பிலடெல்பியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.