தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரி நாடாளுமன்றுக்கு கடிதம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்கொலை செய்துகொள்ள அனுமதி கோரி நாடாளுமன்றுக்கு கடிதம்!


தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வதற்கு நாடாளுமன்றில் அனுமதி வேண்டி பி.ஏ.லபள்யூ. அபேவர்தன என்ற வழக்கறிஞர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


தான் சேவையாற்றிய காணி சீர்திருத்த ஆணைக்குழுவில் இருந்து எவ்வித காரணமுமின்றி தன்னை பதவி நீக்கியமையால், மக்களின் வரிப்பணத்தில் கல்விகற்ற கடனை செலுத்த முடியாமல் போனதற்காக தான் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்ளவுள்ளதாக அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


"கடன் செலுத்த இயலாமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளல்" என்ற தொனிப்பொருளின் கீழ் எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


தனது சிறு வயது முதல் உயர்தரம் வரையிலும், பின்னர் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றதன் மூலம் தான் இந்நாட்டு மக்களுக்கு பாரியளவில் கடன்பட்டிருப்பதாக வழக்கறிஞர் பி.ஏ.லபள்யூ அபேவர்தன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.