சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்த பிரபல கிரிக்கட் வீரர் தில்ருவண் பெரேரா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்த பிரபல கிரிக்கட் வீரர் தில்ருவண் பெரேரா!

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவன் பெரேரா அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டுக்கு (SLC) அனுப்பிய கடிதத்தில், பெரேரா தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான நேரம் இது என்று தான் நம்புவதாகக் கூறினார்.

இருப்பினும், இன்னும் சிறிது காலம் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவேன் என்றும் அவர் கூறினார்.

"இலங்கை கிரிக்கெட் ஆனது எனது காலம் முழுவதும் பெரும் உத்வேகத்தையும் ஆதரவையும் அளித்தது. உங்களுக்கும், செயற்குழுவிற்கும், கடந்த காலத்திலும் தற்போதுள்ள எனது பயிற்சியாளர்களுக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று தில்ருவன் பெரேரா கூறினார்.

39 வயதான அவர் கடைசியாக 2021 ஜனவரியில் இங்கிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இலங்கைக்காக விளையாடினார்.

டிசம்பர் 2017 இல், தில்ருவான் 100 அல்லது அதற்கு மேற்பட்ட டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய அதிவேக இலங்கை மற்றும் உலகின் ஏழாவது வீரர் ஆனார்.

அவர் தனது 25வது போட்டியின் போது இந்த சாதனையை நிகழ்த்தினார், இச்சாதனையை முதலில் படைத்த முத்தையா முரளிதரனை விட இரு போட்டிகள் குறைந்த எண்ணிக்கையில் இச்சாதனையை இவர் புதுப்பித்தார். (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.