டிக்டாக் தகராறு - கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டிக்டாக் தகராறு - கத்தியால் குத்தியதில் இளைஞர் ஒருவர் பலி!

டிக்டாக் வீடியோ தொடர்பான தகராறில் 17 வயது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் கிராண்ட்பாஸ், மாதம்பிட்டிய லேன் வழியாக சில நண்பர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவருக்குத் தெரிந்த மற்றுமொரு இளைஞன் அவரை முதுகில் இருந்து கத்தியால் குத்தியதை அடுத்து, காயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சமூக ஊடக தளமான டிக்டாக் இல் உருவாக்கப்பட்ட வீடியோ தொடர்பான தகராறில் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை கத்தியால் குத்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலியானவர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவத்தை தொடர்ந்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.