நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“கொடுக்க முடியும். ஆனால் அது வெளியே பெரிய பிரச்சனை ஒன்றாக அமையும். நான் அதை அமைச்சரவைக்கு வழங்குகின்றேம்” என்று நிதி அமைச்சர் கூறினார்.
அவ்வாறான அறிக்கை கிடைத்தால் நல்லது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி அடுத்த அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க நிதி அமைச்சர் இணங்கியுள்ளார்.
இதேவேளை, இவ்வருடம் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 6900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என நிதியமைச்சு அமைச்சரவைக்கு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)