நாட்டின் நிதி நிலை குறித்து பகிரங்கப்படுத்தினால் பாரிய பிரச்சினையாக அமையும் - அமைச்சர் பசில்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டின் நிதி நிலை குறித்து பகிரங்கப்படுத்தினால் பாரிய பிரச்சினையாக அமையும் - அமைச்சர் பசில்

நாட்டின் நிதி நிலை குறித்த அறிக்கையை பகிரங்கப்படுத்தினால் அது பாரிய பிரச்சினையாக அமையும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அமைச்சரவையில் முன்வைத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“கொடுக்க முடியும். ஆனால் அது வெளியே பெரிய பிரச்சனை ஒன்றாக அமையும். நான் அதை அமைச்சரவைக்கு வழங்குகின்றேம்” என்று நிதி அமைச்சர் கூறினார்.

அவ்வாறான அறிக்கை கிடைத்தால் நல்லது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி அடுத்த அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்க நிதி அமைச்சர் இணங்கியுள்ளார்.

இதேவேளை, இவ்வருடம் இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன் தொகை 6900 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என நிதியமைச்சு அமைச்சரவைக்கு அறிக்கையொன்றின் மூலம் அறிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.