தனது இரு குழந்தைகளை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துக்கொண்ட இலங்கை தந்தை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது இரு குழந்தைகளை கொலை செய்து, தானும் தற்கொலை செய்துக்கொண்ட இலங்கை தந்தை!

தனது இரு குழந்தைகளை கொலை செய்து, தந்தையும் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவமொன்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட நபர் இலங்கையர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவுஸ்திரேலிய காவல்துறையினரை மேற்கோள்காட்டி அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய காவல்துறையினர் கருத்துத் தெரிவிக்கையில்,

இந்திக்க குணதிலக்க (வயது - 40) என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவத்தில் 4 வயதான மகளும், 6 வயதான மகனுமே கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்துடன் வேறு நபர்கள் தொடர்புபடவில்லை.

மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சூழ்நிலைகள் முழுமையாக ஆராயப்படும், இதற்கு சிறிது நேரம் எடுக்கும், ஆனால் இந்த கட்டத்தில் நான் உங்களுக்கு சொல்கிறேன், இந்த சம்பவத்தை நாங்கள் இரட்டை கொலை தற்கொலையாக கருதுகிறோம் என அவர் மேலும் தெரிவிக்கின்றனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.