அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வீட்டின் நீர் நிலுவைத் தொகை 20 இலட்சம் ரூபா!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ வீட்டின் நீர் நிலுவைத் தொகை 20 இலட்சம் ரூபா!!!

உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து இதுவரை குடிநீர் கட்டணத்தை செலுத்தாத 30 அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலுவைத் தொகையை அவர்களின் மாதாந்த சம்பளம் அல்லது ஓய்வூதியத்தில் இருந்து ஒதுக்குமாறு நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

நிலுவைத் தொகையை செலுத்த வேண்டிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 40 நபர்கள் இருப்பதாகவும், அவர்களில் பத்து நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

மேலும் அமைச்சர் ஒருவரின் வீட்டின் நீர் நிலுவைத் தொகை ரூ. 2 மில்லியனைத் தாண்டியதாக வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டணங்களை விரைவாக செலுத்துவதற்கான இறுதி அறிவிப்புகளும் இந்த வாரத்தில் வெளியிடப்பட்டன.

இதன்படி, தொடர்ந்தும் கட்டணம் செலுத்தத் தவறிவரும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.