ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இம்மாதம் (ஜனவரி) இதுவரையில் 5,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

மொத்த நோயாளர்களில் 60% மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலி மற்றும் குருநாகல் பிரதேசங்களிலும் கணிசமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

ஜனவரி மாதத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை டெங்கு நோயாளர்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகிறது.

செப்டம்பரில் 1,370, ஒக்டோபரில் 2,979, நவம்பரில் 4,561, டிசம்பரில் 8,096 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.