வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு!

இன்று முதல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 24 மணி நேர தினசரி கொரோனா தடுப்பூசி மையத்தை இலங்கை விமானப்படை நிறுவியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் இலங்கையர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அல்லது பகுதியளவு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஃபைசர் Pfizer கொரோனா தடுப்பூசியை வழங்குவதற்காக இந்த தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பூசியின் முதல், இரண்டாவது அல்லது பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ளார வெளிநாடுகளில் இருந்து திரும்பும் இலங்கையர்களுக்கு இது வழங்கப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், இலங்கையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு சுகாதார அதிகாரிகள் இன்று ஆரம்பித்துள்ளனர்.

இத்தடுப்பூசி திட்டத்தின் கீழ் 12-15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.