வர்த்தக துறையில் ஈடுபடுபவர்கள் என கூறப்படும் இருவருக்கு இந்த அபராதம் நேற்று (06) கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஸ்ரீ ராகலவினால் விதிக்கப்பட்டது.
தம்பதிகள் தேனிலவிற்காக இலங்கைக்கு வந்துள்ளதோடு, இதன் போது அவர்கள் வெலிகம கடற்கரையில் ஆளில்லா விமானத்தை இயக்கி தங்களைப் பற்றிய படங்கள் மற்றும் வீடியோ காட்சிகளைப் படம்பிடித்தனர்.
வெலிகம கடற்கரையில் அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை இயக்கிய குற்றச்சாட்டில் தம்பதியை வெலிகம பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சிவில் விமானப் போக்குவரத்துச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர்களை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். (யாழ் நியூஸ்)