மீண்டும் தொடரும் மின் தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மீண்டும் தொடரும் மின் தடை!

இன்றும் பல பகுதிகளில் அவ்வப்போது மின்சாரம் தடைபடலாம் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் உள்ள ஜெனரேட்டர் பழுதடைந்துள்ளதால் மின்சாரம் தடைபடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மின்சார விநியோகத்திற்கான அதிக தேவையினால் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இன்று இரவு 09.30 மணி வரை அவ்வப்போது மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென மின் தடை ஏற்பட்டது.

களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் விசையாழியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.