VIDEO: கூறியதை போலவே முருத்தெட்டுவே ஆனந்த தேரரை புறக்கணித்த பல்கலைக்கழக மாணவர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: கூறியதை போலவே முருத்தெட்டுவே ஆனந்த தேரரை புறக்கணித்த பல்கலைக்கழக மாணவர்கள்!


கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்த பல ஆசிரியர் சங்கங்கள் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக பிரதான மாணவர் ஒன்றியம் கொழும்பு பல்கலைக்கழகத்தின் 2019 ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய பட்டமளிப்பு விழாவில் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.


முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் சான்றிதழைப் பெற சிலர் மறுத்த நிலையில், பல மாணவர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்து பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டனர்.


முகாமைத்துவ பீடம் மற்றும் நிதி ஆசிரியர் சங்கமும் (FMFTA) இன்றைய நிகழ்வைப் புறக்கணித்தது.


கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்தமை தொடர்பில் அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


 

 


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.