மத்திய அதிவேக நெடுஞ்சாலை பகுதி II திறக்கும் திகதி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய அதிவேக நெடுஞ்சாலை பகுதி II திறக்கும் திகதி அறிவிப்பு!

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம முதல் குருநாகல் வரையிலான பகுதி ஜனவரி 15 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று அறிவித்துள்ளார்.

மீரிகமவில் இருந்து குருநாகல் வரையிலான பகுதி நான்கு வழிச்சாலைகளை உள்ளடக்கியது மற்றும் ஐந்து பரிமாற்றங்களையும் கொண்டுள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருணாகல் பகுதியானது இரு இடங்களுக்கும் இடையில் சுமார் 39.7 கிலோமீற்றர் எனவும், 25 நிமிடங்களுக்குள் பயணிக்க முடியும்.

கொழும்பையும் கண்டியையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை கண்டி, குருநாகல் மற்றும் தம்புள்ளைக்கு செல்வோருக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

நுழைவாயில் கம்பஹா மாவட்டத்தில் மீரிகமவிலும், வெளியேறும் வழி குருணாகல் நகரிலும் இருக்கும்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது: கடவத்தை முதல் மீரிகம வரையிலான பகுதி 1 அண்ணளவாக 37 கி.மீ உம், பிரிவு 2 மீரிகம முதல் குருநாகல் வரை அண்ணளவாக 39.7 கி.மீ ஆகும், மீரிகம முதல் அம்பேபுஸ்ஸ வரையிலான தூரம் அண்ணளவாக 9.1 கி.மீ உம், பகுதி 3 பொத்துஹர முதல் கலகெதெர வரை அண்ணளவாக 32.5 கி.மீ உம், மற்றும் பிரிவு 4 குருநாகலிலிருந்து தம்புள்ளை வரை அண்ணளவாக 60.3 கி.மீ ஆகும்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் எஞ்சிய பகுதிகள் மேலும் சில ஆண்டுகளில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.