டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை மீண்டும் சேவையில் அமர்த்த முடிவு செய்யப்படவில்லை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

டாக்டர் ஷாபி ஷிஹாப்தீனை மீண்டும் சேவையில் அமர்த்த முடிவு செய்யப்படவில்லை!


டாக்டர். ஷாபி ஷிஹாப்தீனை பணியில் மீளமர்த்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என பொது சேவை ஆணையத்தின் சுகாதார சேவைகள் குழு தெரிவித்துள்ளதாக பிரதான செய்தி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் குருநாகல் வைத்தியசாலையின் டாக்டர். ஷாபி ஷிஹாப்தீன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்தார்.

பின்னர், அவரை மீள சேவையில் அமர்த்தவும், கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட காலத்திற்கான நிலுவைத் தொகையை வழங்கவும் அமைச்சகம் முடிவு செய்துள்ளது என்று பல ஊடகங்களில் நேற்றைய தினம் செய்தி வெளியாகிருந்தது. (யாழ் நியூஸ்)




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.