சடுதியாக ஆற்றில் குதித்த இளைஞன் மற்றும் யுவதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சடுதியாக ஆற்றில் குதித்த இளைஞன் மற்றும் யுவதி!

மகாவலி ஆற்றில் இளைஞன் ஒருவரும் யுவதி ஒருவரும் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பதுளை மாவட்டம் மஹியங்கனை பாலத்தில் இருந்து இளைஞன் ஒருவனும் யுவதி ஒருவரும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர்.

இருப்பினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்திக் கரை சேர்ந்ததையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதி மக்களால் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மஹியங்கனை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காணாமல் போன யுவதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு காணாமல் போயுள்ள யுவதி ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவர் நேற்று காலை மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்த நபர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கும் போது,

முதலில் யுவதியே ஆற்றில் குதித்ததாகவும் அதன் பின்னர் இளைஞனும் ஆற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார். குறித்த சம்பவம் அங்கிருந்த நபர் ஒருவரின் கைப்பேசியில் பதிவு செய்யப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.