ஷாபிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத சுகாதார அமைச்சின் செயலாளர் பணி இடைநிறுத்தப்படல் வேண்டும்! ரத்தன தேரர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஷாபிக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத சுகாதார அமைச்சின் செயலாளர் பணி இடைநிறுத்தப்படல் வேண்டும்! ரத்தன தேரர்


வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்காத சுகாதார அமைச்சின் செயலாளரை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசாரணை அறிக்கையை பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பாததற்காக முன்னாள் மற்றும் தற்போதைய சுகாதார அமைச்சின் செயலாளர்களை பணி இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரத்தன தேரர் தெரிவித்துள்ளார். 

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்கப்படவில்லை எனவும் ரத்தன தேரர் மேலும் சுட்டிக் காட்டினார். 

மேலும், இது நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை மக்கள் மத்தியில் மறக்க வைக்க வைத்தியர் ஷாபி தொடர்பான சர்ச்சையை மீண்டும் மக்கள் மத்தியில் தூண்டிவிடும் அரசியல் நாடகங்களில் ஒன்று என சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.