மனைவி அழகாக இருந்ததால் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்லும் கணவன்; விரக்தியில் மனைவி தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மனைவி அழகாக இருந்ததால் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்லும் கணவன்; விரக்தியில் மனைவி தற்கொலை!


கணவன் வீட்டிலேயே பூட்டி வைத்து துன்புறுத்தியதால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்நாடக மாநிலம், பெங்களூருவை சேர்ந்தவர் வினய். சங்கீதா என்பவரை காதலித்து 04 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.


இருவரும் மென்பொருள் துறையில் பணியாற்றிய போது 05 வருடங்களின் முன் அறிமுகமாகி, திருமணம் செய்து கொண்டவர்கள்.


திருமணத்திற்கு பிறகு மனைவி மீது சந்தேகப்பட்டு வந்துள்ளார். மனைவி அழகாக இருப்பதால் அவர் யாருடனும் பேச கூடாது என அவரிடம் கூறியுள்ளார்.


மேலும் செல்போனை சோதிப்பது நண்பர்களுடன் பேசினால் சந்தேகிப்பது போன்ற காரியங்களை அவர் செய்துவந்ததால் சங்கீதா மன உளைச்சலில் இருந்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன் என்பதால் அவரை விட்டு விலகவும் முடியாமல் தவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில், வினயின் சந்தேக புத்தி அளவுக்கு அதிகமாக சென்றுள்ளது.


அவர் சில நாட்களாக சங்கீதாவை வீட்டில் வைத்து பூட்டி விட்டு வைத்து விட்டு வேலைக்கு சென்றுள்ளார். இதனை ஒருகட்டத்தில் வெறுப்படைந்த சங்கீதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக உள்ள வினயை தேடி வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.