கொழும்பு - மருதானையில் இரு வீடுகள் தீக்கரையானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பு - மருதானையில் இரு வீடுகள் தீக்கரையானது!


கொழும்பு - மருதானை தேவநம்பியதிஸ்ஸ மாவத்தையில் உள்ள இரண்டு வீடுகள் இன்று (18) தீக்கிரையாகியுள்ளன.


இரண்டு தீயணைப்பு வாகனங்களை அனுப்பி தீயை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ள போதிலும், இரண்டு வீடுகளின் தளபாடங்கள் தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  


ஒரு வீட்டின் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், காலையில் வேலைக்குச் செல்வதற்கு முன்பாக கடவுளுக்கு ஏற்றிய விளக்கை எரிய விட்டுவிட்டு சென்றதன் காரணமாக தீ பரவியிருக்கலாம் என்றும் குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.


அதன்படி அந்த தீ மற்ற வீட்டிற்கும் பரவி சேதம் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இந்த தீ விபத்தில் எவருக்கும் உயிர்சேதமோ காயமோ ஏற்படவில்லை. (யாழ் நியூஸ்)



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.