லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு - மக்களிடத்தில் பகிரவும்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு - மக்களிடத்தில் பகிரவும்!

டிசம்பர் 4 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னர் விநியோகிக்கப்பட்ட அனைத்து சீல் வைக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படாத சமையல் எரிவாயு சிலிண்டர்களை மீளப்பெறுமாறு லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த திகதிக்கு முன்னர் வழங்கப்பட்ட அனைத்து எரிவாயு சிலிண்டர்களையும் திரும்பப் பெறுமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நிறுவனத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த உத்தரவின்படி, தற்போது வீடுகள் மற்றும் விற்பனை நிலையங்களில் இருக்கும் எரிவாயு சிலிண்டர்களை லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் திரும்பப் பெறவுள்ளது.

இதேவேளை, கடந்த ஒரு வாரத்தில் நாட்டில் 430 வாயு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பலகே தெரிவித்தார்.

நவம்பர் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக எரிவாயு தொடர்பான வெடிப்புகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி குழுவின் தலைவர் வல்பலாகே தெரிவித்தார்.

அண்மையில் பல எரிவாயு தொடர்பான சம்பவங்கள் பதிவாகியதையடுத்து, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தேவைகளுக்கு இணங்க லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் உள்நாட்டு சமையல் எரிவாயு விநியோகத்தை நேற்று ஆரம்பித்தது.

பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், புதிய வீட்டு எரிவாயு சிலிண்டர்களின், வால்வுகளில் லிட்ரோ கேஸ் லங்கா லோகோவுடன் வெள்ளை பின்னணியில் சிவப்பு லோகோவுடன் பொலித்தீன் முத்திரைகளுடன் இருக்கும் என CAA தெரிவித்துள்ளது.

லாஃப்ஸ் கேஸ் பிஎல்சியால் விநியோகிக்கப்படும் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் மஞ்சள் மற்றும் நீல நிறங்களில் உள்ளன, மேலும் பாலித்தீன் முத்திரையையும் கொண்டுள்ளது.

இரண்டு எரிவாயு நிறுவனங்களும் நேற்று புதிய வீட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கத் தொடங்கின. (யாழ் நியூஸ்)
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.