பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு!


யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவர் யாழ். வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுப்பிரமணியம் சிவபாலன் என தெரியவந்துள்ளது. 

இறக்கும் போது அவருக்கு 51 வயது. இவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

சாவகச்சேரி தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் வெளிநாட்டவர் ஒருவருடைய தென்னம் காணியை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருபவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே தென்னம் தோப்பிற்குள் அமைந்துள்ள வீடடடிலிருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.