பாடசாலை மாணவர்களிடம் வசதிக் கட்டணம் அறவிடுவதை இடைநிறுத்த முடிவு?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலை மாணவர்களிடம் வசதிக் கட்டணம் அறவிடுவதை இடைநிறுத்த முடிவு?


பாடசாலை மாணவர்களிடம் வசதிக் கட்டணம் அறவிடுவதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி சுற்றறிக்கை ஒன்றை வெளியிடுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் எதிர்க்கட்சி தலைவரான சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.


இது தொடர்பில் தலையிட்டு மாணவர்களிடமிருந்து வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் அறவிடுவது தொடர்பில் கல்வி அதிகாரிகளிடம் விசாரணையை முன்னெடுப்பது முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் ஒரு மாணவரிடம் ரூ. 3,000 மற்றும் மற்றுமொரு மாணவரிடமிருந்து ரூ. 2,400 வசதி கட்டணமாக பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


வசதி மற்றும் சேவைக் கட்டணங்களை இடைநிறுத்தும் சுற்றறிக்கையை வெளியிடுமாறு கல்வி அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.


அதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.