பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய விமானம் இலங்கையை வந்தடைந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்தவின் உடற்பாகங்கள் தாங்கிய விமானம் இலங்கையை வந்தடைந்தது!


பாகிஸ்தானில் அடித்து எரித்துக் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளரான பிரியந்த குமார தியவடனவின் உடற்பாகங்கள் தாங்கிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்றுமுன்னர் தரையிறங்கியது.

பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்-186 விமானம், தரையிறங்கியது.

கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாராவின் பிரேத பரிசோதனை சியால்கோட்டின் அராமா இகுபால் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது, பின்னர் அவரது உடல் 1122 ஆம்பியூலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் லாகூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந் நிலையில் இன்றைய தினம் உடல் ஆம்பியூலன்ஸ் மூலமாக லாகூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு பஞ்சாப் சிறுபான்மை விவகார அமைச்சர் இஜாஸ் ஆலம் அகஸ்டின் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் மூலத்தில் அரசு மரியாதையுடன் பிரியந்த குமாரவின் உடலை அனுப்பி வைத்தார்.

சமய நல்லிணக்கம் தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் விசேட பிரதிநிதி ஹாபிஸ் மொஹமட் தாஹிர் அஷ்ரபி, இலங்கையின் தூதுவர் யாசின் ஜோயா மற்றும் பஞ்சாப் உள்துறை மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் உட்பட ஏனைய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

49 வயதான பிரியந்த குமாரவின் கொலை குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 131 நபர்களை இதுவரை கைதுசெய்துள்ளதாக பஞ்சாப் காவல்துறையினர் திங்களன்று தெரிவித்துள்ளனர்.

இந்த 131 பேரில் 26 நபர்கள் கொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.