அவரச திருத்த வேலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவரச திருத்த வேலை காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின்வெட்டு!


அவசர திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, நாளை 07ஆம் திகதி பாண்டிருப்பு, அக்பர் கிராமம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை (11), நீதிமன்ற வீதி, ரெஸ்ட் ஹவுஸ் வீதி, வீட்டுத்திட்டம் குறுந்தயடி, பாலமுனை , அட்டாளைச்சேனை, ஒலுவில் வீட்டுத்திட்டம், ஹிச்ரா பிரதான வீதி அம்பாறை வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

திங்கட்கிழமை (13), சின்னாபாலமுனை மற்றும் கோணவத்தை ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (14), அம்பாறை வீதி, வங்கலாவாடி, சென்னல்கிராமம் ஆகிய பகுதிகளிலும் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

18ஆம் திகதி, வைத்தியசாலை வீதி இருந்து தாளவெட்டுவான் ப்ரதர் ஹவுஸ் வீதி, மணல்சேனை, மருதமுனை, துரவந்தியமேடு, பெரியநீலாவனை, பாண்டிருப்பு, சென்னல்கிராமம் மலையடிகிராமம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

21ஆம் திகதி, மைகாட்டி இருந்து நைனாகாடு ஆகிய பகுதிகளிலும் 29ஆம் திகதி, சின்னாபாலமுனை மற்றும் கோணவத்தை ஆகிய பகுதிகளிலும் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

-ஷிஹான்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.