இரண்டாவது திருமணம் செய்த நபரொருவர் பித்தளைப் பாத்திரங்களால் அடித்துக் கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரண்டாவது திருமணம் செய்த நபரொருவர் பித்தளைப் பாத்திரங்களால் அடித்துக் கொலை!


பதுளை - ஒலியமண்டிய பிரதேசத்தில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில், உயிரிழந்த 25 வயதுடைய நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 21 வயதுடைய இளம்பெண் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.


முதல் திருமணம் செய்த மனைவி கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட தரப்பினரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து சமரசம் செய்து வைத்துள்ளனர்.


இரண்டாவது மனைவியின் தந்தை, குறித்த நபரையும் மகளையும் வேனில் ஏற்றி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளதுடன், அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.


இந்த தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


இந்த சம்பவம் தொடர்பாக இரண்டாவது மனைவியின் தந்தை, தாய் மற்றும் அவரது இளைய சகோதரர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.