இலங்கையர் கொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையர் கொலை தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்!


பாகிஸ்தான் - சீல்கொட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டர் பதிவின் மூலம் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் ஒரு நாடாக பாகிஸ்தான் வெட்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு காரணமான அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க தயங்க மாட்டோம் என்றும் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இச்சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யும் நடவடிக்ைககள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவரது ட்விட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.