அபுதாபி நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அபுதாபி நோக்கி புறப்பட்டார் ஜனாதிபதி!


ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் இடம்பெறவுள்ள ஐந்தாவது இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் நேற்று (03) பிற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் தளத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள், அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடினார்.

இந்து சமுத்திரம் சார்ந்த நாடுகளில் மற்றும்  அச்சமுத்திரத்தை பரவலாக பயன்படுத்துகின்ற ஏனைய நாடுகளை பாதிக்கின்ற பொது அபிலாசைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கத்தில் 2016 ஆம் ஆண்டு "இந்து சமுத்திர மாநாடு" ஆரம்பிக்கப்பட்டது. இதன் நான்காவது மாநாடு 2019 இல் மாலைதீவில் நடைபெற்றதோடு அங்கு "இந்து சமுத்திர வலயத்தின் பாதுகாப்பும் சம்பிரதாயமற்ற சவால்கள்" தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.

சுற்றாடல், பொருளாதாரம், தொற்றுப்பரவல் என்பதை தொனிப்பொருளாகக் கொண்ட ஐந்தாவது மாநாடு, இன்று மற்றும் நாளை அபுதாபியில் இடம்பெறவுள்ளது. 

இம்முறை மாநாட்டில்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆரம்ப உரை நிகழ்த்தவுள்ளார்.

வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோர் ஜனாதிபதி அவர்களுடன் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.