இந்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொ்ர்பில் மேலும் தெரியவருகையில்,
புத்தளம் தில்லையடி பகுதியில் உள்ள இரவு நேர ஹோட்டலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
தில்லையடி பகுதியில் உள்ள ஹோட்டலில் உணவு எடுத்துச் செல்வதற்காக சென்ற நபர் ஒருவருடைய மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீப்பிடித்துள்ளது.
ஹோட்டலுக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு உணவு வாங்கிக் கொண்டு பயணிப்பதற்காக மோட்டார் சைக்கிளை இயக்க ஆரம்பித்துள்ளார்.
இதன்போதே, மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, ஹோட்டல் உரிமையாளர், பணியாளர்கள், ஹோட்டலிற்கு சென்றிருந்தவர்களும் இணைந்து சில நிமிடங்களில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும், மோட்டார் சைக்கிள் முழுமையாக எரிந்துள்ளது. எனினும், உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.