முஸ்லிம்களுடன் எமக்கு எந்தக் கோபமும் இல்லை! பிரியந்தவின் குடும்பத்தினர் உருக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களுடன் எமக்கு எந்தக் கோபமும் இல்லை! பிரியந்தவின் குடும்பத்தினர் உருக்கம்!


பாகிஸ்தானின் சியால்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட, பிரியந்த குமாரவின் வீட்டிற்கு கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர், முஜிபுர் ரஹ்மான் வெள்ளிக்கிழமை (10) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது பிரியந்தவின் தந்தை, மனைவி, மற்றும் 2 மகன்மார் முஜிபுர் ரஹ்மான் எம்.பி.யுடன் மிகவும் சுமூகமாக உரையாடியுள்ளனர்.

பிரியந்தவின் கொலை மூலம், தாங்கள் முஸ்லிம்களை விரோதிகளாக பார்க்கவில்லை எனவும், முஸ்லிம்களுடன் தாம் எந்தக் கோபமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பிரியந்தவின் கொலையை அடுத்து, தமது வீட்டிற்கு ஆறுதல் கூற வந்த ஒரேயொரு முஸ்லிம் அரசியல்வாதி, முஜிபுர் ரஹ்மானே எனவும், தான் கொழும்பில் பணியாற்றிய போது, அதிகமான முஸ்லிம் நண்பர்கள் தமக்கு இருந்ததாகவும், பிரியந்தவின் தந்தை தனது கைகளை பிடித்தபடி கூறியதாகவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் குறிப்பிட்டார்.

-அன்சிர்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.