நாட்டில் வாகன இறக்குமதிக்கு தடை இருக்கும் நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதிநவீன வாகனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் வாகன இறக்குமதிக்கு தடை இருக்கும் நிலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள அதிநவீன வாகனம்!



நாட்டில் போதியளவு அமெரிக்க டொலர் கையிருப்பு இல்லாத காரணத்தால் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதிலிருந்து மீள டொலர்கள் வெளியேறுவதை காரணம் காட்டி கடந்த ஒரு வருட காலமாக வாகன இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய பின்னணியில் ஹம்பந்தோட்டை துறைமுகத்தில் இந்த தடையை மீறி சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியான வாகனம் தரையிறங்கியதாக நேற்று (10) எமக்கு செய்தி கிடைக்கப்பெற்றது.

இது ஜப்பானில் தயாரிக்கப்பட்ட அதிநவீன Toyota Land Cruiser 300, இலங்கையில் வரியுடன் சுமார் 60 மில்லியன் ரூபா பெறுமதியானது, ஆனால் வரியின்றி சுமார் 15 மில்லியன் ரூபா பெறுமதிக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலதிக தகவல் வெளியான நிலையில், இது இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் வரியின்றி இறக்குமதி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்வதை இலங்கை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது, ஆனால் இராஜதந்திர சேவைக்காக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இந்த சட்டம் பொருந்தாது என துறைமுக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.