பழையது அமுலில் இல்லை; புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பழையது அமுலில் இல்லை; புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது!


இன்று (16) முதல் 31 டிசம்பர் வரை பொது மற்றும் பணி நடவடிக்கைகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டுதல்களை சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே டிசம்பர் 01ஆம் திகதி வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. பின்னர் இப்போது புதிய வழிகாட்டுதல்கள் மேலும் தளர்வு நடவடிக்கைகள் அடங்கிய புதிய வழிக்காட்டுதல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், திருமணங்களின் போது மண்டபத்தின் கொள்லளவில் மூன்றில் ஒரு பகுதியினர் என்ற ரீதியில் அதிகபட்சமாக  200 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்,பொதுவெளிகளில் இடம்பெறும் திருமண  நிகழ்வுகளில்  250 பேர் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், திரையரங்குகளில் ஆசன எண்ணிக்கையில் 75 சதவீதமானோருக்கு பங்குபற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டுக்களை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும் , பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மண்டபங்களில் நடத்தப்படும் ஏனைய வைபங்களுக்கு அதிகபட்சம் 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, பொது வெளிகளில் 150 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மத வழிபாட்டு தளங்களில் பக்தர்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டல்களை பின்பற்ற வேண்டும் என்றும் சம்மேளனங்களை நடத்தும் போது சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட வேண்டும் என்பதோடு, இவற்றுக்கு அதிகபட்சம் 150 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக தோற்றவுள்ள மாணவர்களுக்காக மாத்திரம் மேலதிக வகுப்புக்களை நடத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.