அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகும் 41 உறுப்பினர்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசாங்கத்திலிருந்து வெளியேற தயாராகும் 41 உறுப்பினர்கள்!


அரசாங்கத்தை விட்டு 41 உறுப்பினர்கள் விலகத் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக 41 உறுப்பினர்கள் உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.


ஆளும் கூட்டணிகளுடனும், எதிர்க்கட்சிகளுடனும் இந்தக் குழுவினர் பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


அரசாங்கத்தை விட்டு விலகியதன் பின்னர் எதிர்க்கட்சியுடன் நடாத்தும் பேச்சுவார்த்தைகளின் போது முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நடாத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.


கரு ஜயசூரிய நாடாளுமன்றை பிரதிநிதித்துவம் செய்யாத போதிலும் அவரது தலைமையை ஏற்றுக்கொள்வதற்கு பெரும்பான்மையானவர்கள் இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.