ஒரு கோடி ரூபாயை தாண்டியுள்ள 40 அமைச்சர்களின் குடிநீர் நிலுவை கட்டணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒரு கோடி ரூபாயை தாண்டியுள்ள 40 அமைச்சர்களின் குடிநீர் நிலுவை கட்டணம்!


மூத்த மற்றும்  தற்போதைய அமைச்சர்கள் உட்பட 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொத்தம் 1 கோடி ரூபாய்க்கு மேல் குடிநீர் கட்டணத் தொகையை நிலுவை வைத்துள்ளனர்.

இதனை டெய்லி நியூஸ் தனது கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியுள்ளது. 

அதில் மேலும் தெரிவிக்கையில், 20 எம்.பிக்களின் வீடுகளில் இருந்து குடிநீர் கட்டண நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது. 

பாராளுமன்ற உறுப்பினர்களில் தற்போதைய பாராளுமன்றத்தில் உள்ள அமைச்சரவை அமைச்சர்கள் 20 பேரும், ஓய்வூதியம் பெறுகின்ற 10 முன்னாள் எம். பிக்களும், மேலும் தற்போது உயிருடன் இல்லாத 10 முன்னாள் எம்பிக்களும் இதில் அடங்குவர். 

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டண நிலுவையில் ரூ. 18 லட்சம் தற்போதைய பாராளுமன்றத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினரால் மாத்திரம் செலுத்தாமல் நிலுவையில் உள்ளது.

இது தவிர, கொரோனா தொற்றுநோய் காரணமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளின் கீழ் எம்.பி.க்களின் செலுத்தத் தவறிய பணம் உள்ளடக்கப்பட்டதா என்றும் அந்த செய்தி அறிக்கை கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து குறித்த நிலுவைத் தொகையை மீட்பதாக உறுதியளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அந்த அறிக்கையில், பயன்பாட்டுக் கட்டணத்தை செலுத்தத் தவறியவர்களுக்கு அமைச்சர் அபராதம் விதிப்பாரா அல்லது அவர்களை விட்டுவிடுவாரா என்று கேள்வி எழுப்பியுள்ளது. 

அப்படி நடந்தால் அது பொது மக்களுக்கு இலைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாக இருக்கும் என்று செய்திக் கட்டுரை மேலும் கூறியது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.