VIDEO: நானே எனது மனைவியின் விமான டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தேன்! -ஜனாதிபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நானே எனது மனைவியின் விமான டிக்கெட்டுக்கு பணம் கொடுத்தேன்! -ஜனாதிபதி


"யஹபாலன ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பயணித்த போது, ​​பல வாகனங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வீதிகளும் மூடப்பட்டதை நாம் பார்த்தோம். இவற்றை நிறுத்தினேன். என்னிடம் 2 பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே உள்ளன. நான் அமெரிக்கா சென்றபோது எனது வாகனத்தை பின்தொடர்ந்து 15 வாகனங்கள் வந்தன. இங்கே நமக்கு அப்படி தேவையில்லை.


நான் ஐ.நா பொதுச் சபையில் கலந்து கொண்டபோது, ​​சாதாரண ஹோட்டலில் தங்கியிருந்தேன். என்னுடன் வந்த என் மனைவிக்கு விமான டிக்கெட்டுக்கு நானே பொறுப்பேற்றேன். என்னுடன் 07 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அதுதான் வித்தியாசம். எனக்கும் ஒரு அரண்மனை இருக்கிறது. தேவையில்லாத வீண் விரயங்களைத் தவிர்த்து, நான் தங்கியிருந்த அதே வீட்டில் இப்போதும் தங்கியிருக்கிறேன். இதுதான் வித்தியாசம்." என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தின் கீழ் 100,000 கிலோமீற்றர் காபட் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.