"யஹபாலன ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ பயணித்த போது, பல வாகனங்கள் அவர்களைப் பின்தொடர்ந்து வீதிகளும் மூடப்பட்டதை நாம் பார்த்தோம். இவற்றை நிறுத்தினேன். என்னிடம் 2 பாதுகாப்பு வாகனங்கள் மட்டுமே உள்ளன. நான் அமெரிக்கா சென்றபோது எனது வாகனத்தை பின்தொடர்ந்து 15 வாகனங்கள் வந்தன. இங்கே நமக்கு அப்படி தேவையில்லை.
நான் ஐ.நா பொதுச் சபையில் கலந்து கொண்டபோது, சாதாரண ஹோட்டலில் தங்கியிருந்தேன். என்னுடன் வந்த என் மனைவிக்கு விமான டிக்கெட்டுக்கு நானே பொறுப்பேற்றேன். என்னுடன் 07 பேர் மட்டுமே பயணம் செய்தனர். அதுதான் வித்தியாசம். எனக்கும் ஒரு அரண்மனை இருக்கிறது. தேவையில்லாத வீண் விரயங்களைத் தவிர்த்து, நான் தங்கியிருந்த அதே வீட்டில் இப்போதும் தங்கியிருக்கிறேன். இதுதான் வித்தியாசம்." என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் "நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை திட்டத்தின் கீழ் 100,000 கிலோமீற்றர் காபட் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.