திருகோணமலை, கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற படகு அனர்த்தத்தைக் கண்டித்து அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அனர்த்தத்தைக் கண்டித்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் இயலாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பல ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் டயர்களை எரித்தனர், அதே நேரத்தில் அப்பகுதியில் கடைகளும் மூடப்பட்டன.
இந்த போராட்டம் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் பணிகளில் இலங்கை கடற்படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
இந்த அனர்த்தத்தைக் கண்டித்து கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக மக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளின் இயலாமைக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பல ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் டயர்களை எரித்தனர், அதே நேரத்தில் அப்பகுதியில் கடைகளும் மூடப்பட்டன.
இந்த போராட்டம் காரணமாக போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் காணாமல் போனவர்களைக் கண்டறியும் பணிகளில் இலங்கை கடற்படையினர் தற்போது ஈடுபட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)
Tensions have risen between the public and police in Kinniya, Trincomalee @SriLankaTweet @Kavinthans @newsradiolk @BasnayakeM#LKA #SriLanka #Trincomalee #Kinniya #Tense pic.twitter.com/SeReylkbFZ
— 𝐘𝐮𝐠𝐚𝐧 𝐍𝐚𝐫𝐦𝐚𝐭𝐡𝐚𝐧©️ (@yuganOffcial) November 23, 2021